நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வென்றார்கள். தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் முன்னேறி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் படப்பிடிப்புகள் கடந்த 15ம் தேதி நிறைவடைந்து விட்டது. இதனை இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் சிவாங்கி தெரிவித்துள்ளார். டைட்டில் வென்றது யார் என்பது வருகிற எபிசோட்களில் தெரியவரும். இதன் 4வது சீசனுக்கு சேனல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.