ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

காட்பாதர், வால்டேர் வீரய்யா, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதையடுத்து அவர் நடிக்கும் 154வது படத்தை கே.எஸ்.ரவீந்திரா(பாபி) இயக்க போகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜாவான ரவி தேஜா இணைந்து இருக்கிறார். இது குறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காரில் இருந்து இறங்கும் ரவி தேஜா, ஒரு கேரவனின் கதவை தட்டுகிறார். அப்போது கதவை திறக்கும் சிரஞ்சீவி, தனது முகத்தை காண்பிக்காமல் அவருக்கு கைகுலுக்கி கேரவனுக்குள் இழுக்கிறார். இப்படி ஒரு வீடியோவை அந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.