மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விலகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாகப் பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு வந்தனர். அதனால்தான் சமந்தா மனமுடைந்து இப்படி சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சமந்தா. அடிக்கடி சுவாரசியமாக ஏதாவது ஒரு பதிவிட்டு வருவார். தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்றும் தெரிகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் விலகியிருக்கலாம் என்கிறார்கள்.