ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை; கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் ஜாலியான படமாக இருந்ததால் அதில் நடித்தேன், என்று படத்தின் நாயகி விசாகா சிங் கூறியுள்ளார். பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
இதுபற்றி விசாகா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஜாலியான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர், என்று கூறியுள்ளார்.