நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகில் இன்றுள்ள பல நடிகர்களுக்கும் என்றாவது ஒரு நாள் நாமும் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்ற கனவுதான் நிறைய இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் போன்று தன்னிச்சையாக வளர்ந்து ஒரு உயரிய இடத்தை அடைந்த நடிகர் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை, இனியும் வருவார்களா என்பது சந்தேகமே.
ரஜினி மாதிரி ஆகிறோமோ இல்லையோ அவருடைய படத் தலைப்பையாவது வைத்துக் கொள்வோமே என பலருக்கும் அந்த ஆசை வந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறை அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது. ரஜினிகாந்த் படத் தலைப்பான 'வேலைக்காரன்' படத்தை இதற்கு முன்பு தன் படத்திற்காக வைத்தவர் அடுத்து 'மாவீரன்' படத்தலைப்பை வைத்திருக்கிறார். ரஜினி படத் தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டதில் இது 23வது முறை.

ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' தோல்வியைத் தழுவியது. ரஜினி நடித்த 'மாவீரன்' தோல்வியடைந்தது. சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' என்ன ஆகும் என வெளிவந்தால்தான் தெரியும்.
இதற்கு முன்பு, “வீரா, தர்மதுரை, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், மனிதன், வேலைக்காரன், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, தங்கமகன், ரங்கா, போக்கிரி ராஜா, நெற்றிக்கண், கழுகு, பொல்லாதவன், காளி, நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா,” ஆகிய படத் தலைப்புகள் வெவ்வேறு நடிகர்களின் படங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள.
“கர்ஜனை, விடுதலை, துடிக்கும் கரங்கள், ஆயிரம் ஜென்மங்கள்,” படத் தலைப்புகளை வைத்துள்ள படங்கள் இனிமேல்தான் வெளியாக வேண்டும்.