திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவை அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டார் பார்த்நதிபன். அதோடு படத்தில் நிர்வாணமாகவும் நடித்திருக்கிறார் பிரிகிடா.
இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: துணை இயக்குனராக சென்ற என்னை பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கச் சொல்லிவிட்டார். முதலில் தயங்கினேன் பிறகு கதையும், அதற்கான முயற்சியும் என்னை சம்மதிக்க வைத்தது. கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை அதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் தான் நடிக்க முடியும் என்றார். ஆனால் இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இருவருமே எனது பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மத்தின் பேரில் நடித்தேன். அப்படி நடிப்பதற்கு பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தன என்றாலும் கதைப்படி அது நிர்வாண காட்சி தான். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்கிறார் பிரிகிடா.