அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
கடந்த 2010ஆம் ஆண்டு, 470 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. இது தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் லலித்மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் தஞ்சமடைந்தார்.
இந்தியா அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் அவர் லண்டனில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருகிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவலை வெளியிட்டிருப்பதும் லலித் மோடி தான். சுஷ்மிதா சென்னுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் தற்போது சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், அதுவரை டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
46 வயதாகும் சுஷ்மிதா சென் இதுரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அதன் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். லலித் மோடிக்கு 56 வயதாகிறது. இவருக்கும், மினால் சக்ரானி என்பவருக்கும் 1991ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மினால் 2018ல் லண்டனில் உயிரிழந்தார்.