திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கடந்த 2010ஆம் ஆண்டு, 470 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. இது தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் லலித்மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் தஞ்சமடைந்தார்.
இந்தியா அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் அவர் லண்டனில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருகிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவலை வெளியிட்டிருப்பதும் லலித் மோடி தான். சுஷ்மிதா சென்னுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் தற்போது சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், அதுவரை டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
46 வயதாகும் சுஷ்மிதா சென் இதுரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அதன் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். லலித் மோடிக்கு 56 வயதாகிறது. இவருக்கும், மினால் சக்ரானி என்பவருக்கும் 1991ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மினால் 2018ல் லண்டனில் உயிரிழந்தார்.