திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் இசையமைப்பாளர்களில் ஒருவர் கீரவாணி. 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்தவை. தமிழில் மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நேற்று அவர் இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார். “டான்' படத்தில் இடம் பெற்றுள்ள 'பே' பாடல் போதை தரக் கூடியது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், “லவ் யூ சார்” என நன்றி தெரிவித்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விக்னேஷ் சிவன் எழுதி, ஆதித்யா ஆர்கே பாடியுள்ள பாடல் தான் 'பே'. சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த ஆதித்யா. சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் மகன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரை இறுதியில் வெளியேற்றப்பட்டவர். இருப்பினும் இந்த 'பே' பாடல் அவரை சினிமா புகழின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தெலுங்கிலும் இந்தப் பாடலை ஆதித்யாவே பாடியுள்ளார்.
'பே' பாடலின் லிரிக் வீடியோ யு டியூபில் 47 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'டான்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.