ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான், மலையாள நடிகர்கள் திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறைவானவர்கள் கலந்து கொண்டாலும் ரிச்சாக நடந்த இந்த திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப முன்னணி ஓடிடி நிறுவனம் 25 கோடி கொடுத்து உரிமம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளம் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு தாலிகட்டும் படத்தை தவிர வேறு படமோ கிளிப்பிங்ஸோ மீடியாக்களுக்கு தரக்கூடாது என்று ஓடிடி நிறுவனம் தடை விதித்திருந்ததாம். ஆனால் அதை மீறி திருமணமான 30வது நாளை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சில படங்களை வெளியிட்டார். இது ஓடிடி தளத்திற்கு பிடிக்கவில்லையாம். இதனால் நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து ஓடிடி நிறுவனம் பின்வாங்குவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.