ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) சென்னையில் காலமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், 12 படங்கள் இயக்கி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பிற விருதுகளையும் வென்றுள்ளார். பிரதாப் போத்தனின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக நேற்று தனது பேஸ்புக்கில் சில பதிவுகளை வெளியிட்டார். காதல், அன்பு, மரணம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள்களை காட்டி பதிவு செய்துள்ளார். ஒரு பதிவில் ஜார்ஜ் கார்கள் என்பவரின் மேற்கோளை காட்டி, ‛‛மரணம் என்பது நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது'' என்று பதிவுட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛நீங்கள் ஒரு நோயின் காரணத்தை, ஆணிவேரை குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை குணப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் கடைசி வரை மருத்துவமனையை நம்பித்தான் இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன்'', ‛‛ வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்துவிடும்'' என தெரிவித்துள்ளார்.