நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் நடிகை நக்ஷத்திரா. தற்போது கலர்ஸ் தமிழின் 'வள்ளி திருமணம்' என்கிற தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் எக்ஸிக்யூட்டிவ் புரொடியசராக பணியாற்றி வரும் விஷ்வாவும் காதலித்து வரும் தகவல் அண்மையில் வெளியானது. அதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும், அப்போது மீடியாவுக்கு முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகவே நக்ஷத்திரா சைலன்டாக திருமணம் செய்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நக்ஷத்திராவுக்கு அவரது கணவர் விஷ்வாவுக்கும் திருமண வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.