நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் கார்கி. நிவின்பாலி தமிழில் நடித்த ரிச்சி படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி ஆசிரியையாகவும் தன் தந்தை மீது போடப்பட்ட பொய்யான வழக்குக்கு எதிராக போராடுபவராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் பரிசீலனையில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் தானே இந்த தகவலை கூறியுள்ளார். இந்த கதையையும் கதாபாத்திரத்தையும் கேட்டதும் தன்னைவிட இன்னும் பெரிய நடிகை நடித்தால் தான் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்று கூறியதாகவும் அவரே சாய்பல்லவி பெயரை பரிந்துரை செய்ததாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி தன்னைத்தேடி வந்த ஒரு நல்ல வாய்ப்பை சக நடிகைக்கு சிபாரிசு செய்யும் ஆரோக்கியமான சூழல் தமிழ் சினிமாவில் நிலவுவது ஆச்சரியமான விஷயம்தான்.