நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த போஸ்டரில் காளி வேடம் போட்டிருந்த பெண் ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளரின் கொடியும், மற்றொரு கையில் சிகரெட்டும் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் அதையடுத்து எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பதில் கொடுத்த லீனா மணிமேகலை, சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர் புகை பிடிக்கும் போட்டோவை மீண்டும் வெளியிட்டு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதையடுத்து லீனா மணிமேகலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.