நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான சேத்துமான் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. அறிமுக இயக்குனர் தமிழ், இப்படத்தை பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் தமிழின் புதிய படம் உருவாக இருக்கிறது . இப்படத்தில் 'உறியடி' பட பிரபலம் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.