Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மழையில் ரசிகர்களை நிற்க வைத்தே விழா கொண்டாடிய 'கோப்ரா' குழு

12 ஜூலை, 2022 - 12:44 IST
எழுத்தின் அளவு:
'Cobra'-team-celebrated-in-the-rain-by-making-the-fans-stand

சினிமாவை வாழ வைப்பது ரசிகர்கள்தான். அந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து இருக்கைகளை நிறைத்ததால் தான் நடிகர்களுக்குப் பேரும், புகழும், தயாரிப்பாளர்களுக்கு வசூலும், லாபமும். அப்படிப்பட்ட ரசிகர்களை நேற்றைய 'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் மழையில் கால் கடுக்க நிற்க வைத்து விழாவைக் கொண்டாடினார்கள்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் வளாகத்திற்குள் திறந்த வெளியில் நேற்று மாலை இந்த விழா நடைபெற்றது. விழா ஆரம்பிப்பதற்கு முன்பே, விருந்தினர்களுக்காகவும், பத்திரிகையாளர்களுக்காகவும் போடப்பட்டிருந்த சேர்கள் மழையில் நனைந்தன. ஈரமான இருக்கைகளில் அமர முடியாமல் அனைவரும் தவித்தார்கள். சிலர் சண்டை போட்டதால் குறைந்த அளவில் பிளாஸ்டிக் சேர்களை பிறகு ஏற்பாடு செய்தார்கள். பத்திரிகையாளர்களுக்கு அந்த சேர்கள் கூட இல்லை. நூறு பேர் மேல் வந்திருக்க பத்து சேர்கள் மட்டுமே போடப்பட்டன.

மேலும், ரசிகர்களை விழா நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ரசிகர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அடியாட்கள் போல செயல்படும் 'பவுன்சர்கள்' நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த பவுன்சர் அடியாட்கள் விழாவுக்கு வருபவர்களிடம் அத்துமீறி நடந்த சம்பவங்களும் நடந்தது. பலர் அவர்களிடம் சண்டை போட்டுத்தான் விழா அரங்கம் பகுதிக்கே நுழைய முடிந்தது. விழா நடக்கும் இடத்திலிருந்து சுமார் இருபது மீட்டர் தொலைவில்தான் ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அவ்வப்போது மழை பெய்ய, அமர இருக்கைகள் இல்லாமல் அவர்கள் விழா நடந்த நேரம் முழுவதும் நின்று கொண்டே விழாவைப் பார்த்தார்கள்.

ரசிகர்களுக்கு இருக்கைகள் இல்லாதது பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் யாருமே வருத்தம் தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு மோசமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்ததில்லை என விழாவுக்கு வந்தவர்கள் புலம்பிக் கொண்டே பாதியிலேயே கிளம்பினார்கள்.

கடந்த பத்து நாட்களாகவே சென்னையில் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்க, இந்த சமயத்தில் திறந்த வெளியில் விழா நடத்தலாம் என யோசனை சொன்னவர் யாரோ ?.

தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் அஜய் ஞானமுத்து, விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி, இர்பான் பதான், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கையில் சிகரெட்டுடன் ராதிகா! வைரலாகும் பர்ஸ்ட் லுக்கையில் சிகரெட்டுடன் ராதிகா! ... 'விக்ரம்' குழுவுக்கு வாழ்த்து சொன்ன 'கேஜிஎப்' இயக்குனர் 'விக்ரம்' குழுவுக்கு வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)