மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
"ரோஜா, பம்பாய் படங்கள் வெளியான நேரங்களில், தமிழக இளைஞிகளின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் அரவிந்தசாமி. தொடர்ந்து, அவர் நடித்த படங்கள் மெகா ஹிட்டாகவே, நம்பர்ஒன் நாற்காலியை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார் அவர். ஆனால், திடீரென்று எந்த படத்திலும் அரவிந்த சாமியைக் காண முடியவில்லை. 12 வருடங்களுக்கு பிறகு, இப்போது தன்னை சினிமாவுக்கு கொண்டு வந்த மணிரத்னத்தின் "கடல்படத்தில், மறுபடியும் நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில், தந்தையின் பிசினசில் கவனம் செலுத்தி வந்த அரவிந்தசாமி, இனி தனக்கு பொருத்தமான வேடங்களாக, தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பாராம். என்றாலும், முழுநேர சினிமாக்காரர் ஆகாமல் பிசினஸ், நடிப்பு என்று இரட்டை குதிரை சவாரி செய்ய போகிறாராம்.