நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னட மொழியில் தயாராகி இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியானது சார்லி 777 படம். வளர்ப்பு நாயை மையமாக கொண்டு விலங்குகள் மீதான மனிதனின் அத்துமீறல்களை சொன்ன படம்.
இதை கிரண்ராஜ்.கே என்பவர் எழுதி இயக்கியிருந்தார். பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இதில் முக்கிய காதாபாத்திரத்தில் சார்லி என்ற லாப்ரடோர் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி , ராஜ் பி. ஷெட்டி , டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர்.
தமிழ் தவிர மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் சிறப்பான வசூல் செய்தது. தற்போது 25 வது நாளை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ரக்ஷித் ஷெட்டி அதிரடியாக சில காரியங்களை செய்திருக்கிறார். தெரு நாய்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு படத்தின் லாபத்தில் இருந்து 5 சதவீதமும், படத்தில் பணியாற்றிய 100 தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் வழங்கி உள்ளார்.