ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"வம்சம்" படத்தின் மூலம் அறிமுகமானவர் இசை அமைப்பாளர் தாஜ்நூர். ஏ.ஆர்.ரகுமானிடம் 14 வருடங்கள் கீ-போர்ட் பிளேயராக இருந்தவர். அதன் பிறகு பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தாஜ்நூர் தற்போது "தாய்ப்பால்" என்ற ஆல்பத்துக்கு இசை அமைத்து வருகிறார். இது தாய்ப்பாலின் பெருமைகளை சொல்லும் பாடல்களை கொண்டதாகும்.
இதுபற்றி தாஜ்நூர் கூறியதாவது: இன்றைய தாய்மார்கள் தாய்ப்பால் என்கிற ஒரு விஷயத்தையே மறந்து விட்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் பயப்படும் ஒரு விஷயமாக தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது அழகு குறைந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். வாடகை தாய்மார்களை அமர்த்தி தாய்ப்பால் கொடுக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இதனை தடுக்கவும், தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை தாய்மார்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இந்த ஆல்பத்தை உருவாக்குகிறேன். புவனேஷ்வர் என்பவர் இதை தயாரிக்கிறார். கவிஞர் அறிவுமதி பாடல்களை எழுதியுள்ளார். தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து கிராமத்தில் வழக்கத்தில் உள்ள தாலாட்டு பாட்டு ஒன்றும் இடம் பெறுகிறது. முக்கிய நடிகர் நடிகைகள் தாய்ப்பால் சிறப்பு பற்றி இந்த ஆல்பத்தில் பேசியுள்ளனர். விரைவில் இதனை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.