பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'நாயகி'. இந்த தொடரின் ஆரம்பத்தில் சினிமா நடிகை விஜயலெட்சுமி ஹீரோயினாக நடித்தார். பின் சில காரணங்களுக்காக அவர் தொடரை விட்டு வெளியேற வித்யா பிரதீப் ஹீரோயினானார். வித்யா ப்ரதீப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுபோலவே வில்லியாக நடித்த சுஷ்மா நாயரும் பிரபலமாகி இன்று சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த வித்யா ப்ரதீப், சுஷ்மா நாயர், மீரா கிருஷ்ணன் மற்றும் மெர்சி லேயாள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிரா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். நாயகி தொடரின் நாயகிகள் நால்வரும் ஒன்றாகும் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் 'நாயகி' சீரியலை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இவர்களின் காம்போவில் மீண்டும் புதிய சீரியல் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.