ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
தமிழகத்தைச் சேர்ந்த மாஸ்ட்ரோ என அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்காவில் உள்ளார். 20ம் தேதி தான் சென்னை வருகிறார். இதனால் அங்கிருந்தபடி சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா.
பிரதமர், முதல்வருக்கு நன்றி
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது'' என குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல் இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, ‛‛தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றி'' என்றார்.
எல்லோருக்கும் நன்றி
இளையராஜாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாததால் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள், இந்திய அரசு எனக்களித்த கவுரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி...'' என்றார் இளையராஜா.