ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில், இரவு நேரத்தில் நடிகர் சூர்யா தங்கியதற்கு, கேரள வன ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த, 25ம்தேதி, தேக்கடியில் நடந்த படப்பிடிப்புக்காக, நடிகர் சூர்யா வந்தார். இவர் அன்று இரவு, பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான, முல்லைக்கொடி என்ற இடத்தில், வனத் துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.
இந்த இடத்திற்கு, தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து, படகு மூலம் சிறிது தூரம் சென்று, அதன்பின், 24 கி.மீ., தூரம் வனப்பகுதிக்குள், ஜீப்பில் செல்ல வேண்டும். சூர்யாவை, அப்பகுதியில் தங்க வைப்பதற்கு, கேரள வனத் துறையினர், இரவு 8:00 மணிக்கு மேல், வனத் துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு, கேரள வன ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில், மாலை, 6:00 மணிக்கு மேல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேரள வனத் துறை அமைச்சர் கணேஷ்குமார், இரவு, 8:00 மணிக்கு மேல், தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து, 4 கி.மீ., தூரமுள்ள "லேக் பேலஸ் என்ற இடத்திற்கு சென்றார். எதிர்ப்பு கிளம்பியதால், அவர் உடனே திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவை, 24 கி.மீ., தூரத்திற்கு, அடர்ந்த வனப்பகுதிக்குள், கேரள வனத் துறையினரே அழைத்து சென்றது, வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சூர்யா தங்கியிருந்த இடம், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆபத்தான பகுதியாகும்.இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.