Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புலிகள் சரணாலய வனப்பகுதியில் தங்கிய சூர்யாவுக்கு சிக்கல்...!

29 ஜன, 2013 - 11:27 IST
எழுத்தின் அளவு:

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில், இரவு நேரத்தில் நடிகர் சூர்யா தங்கியதற்கு, கேரள வன ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த, 25ம்தேதி, தேக்கடியில் நடந்த படப்பிடிப்புக்காக, நடிகர் சூர்யா வந்தார். இவர் அன்று இரவு, பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான, முல்லைக்கொடி என்ற இடத்தில், வனத் துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.

இந்த இடத்திற்கு, தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து, படகு மூலம் சிறிது தூரம் சென்று, அதன்பின், 24 கி.மீ., தூரம் வனப்பகுதிக்குள், ஜீப்பில் செல்ல வேண்டும். சூர்யாவை, அப்பகுதியில் தங்க வைப்பதற்கு, கேரள வனத் துறையினர், இரவு 8:00 மணிக்கு மேல், வனத் துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு, கேரள வன ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில், மாலை, 6:00 மணிக்கு மேல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேரள வனத் துறை அமைச்சர் கணேஷ்குமார், இரவு, 8:00 மணிக்கு மேல், தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து, 4 கி.மீ., தூரமுள்ள "லேக் பேலஸ் என்ற இடத்திற்கு சென்றார். எதிர்ப்பு கிளம்பியதால், அவர் உடனே திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவை, 24 கி.மீ., தூரத்திற்கு, அடர்ந்த வனப்பகுதிக்குள், கேரள வனத் துறையினரே அழைத்து சென்றது, வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சூர்யா தங்கியிருந்த இடம், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆபத்தான பகுதியாகும்.இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mathan - Salem,இந்தியா
30 ஜன, 2013 - 08:11 Report Abuse
 Mathan இவனலாம் யாரு அங்க போக சொன்னது....அது இது போலியா இருந்தா பரவால ஆளே போலியா இருந்தா..POLICE HEIGHT QUALIFY..6.2 ஆனா இவன்:-):-):-):-):-):-):-):-)
Rate this:
RR - chennai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2013 - 01:25 Report Abuse
RR சிங்கம் புலி வேட்டைக்கா போயிருக்கும்ஃஃ
Rate this:
முரடன் முருகேஷூ - Corodovaa Tennessee ,இஸ்ல் ஆப் மேன்
30 ஜன, 2013 - 00:26 Report Abuse
 முரடன் முருகேஷூ என்னாது அசிங்கம், சிங்கத்தை பார்க்க போச்சா இல்லை, போலி சிங்கம் அசல் சிங்கத்தை சந்திக்க போச்சா, ஆமா இந்த தலைகணம் புடிச்ச முட்டாள் முருகேஷூக்கு அங்கு என்ன வேலை, வெண்ணை ஊருல சொந்தத்தை விட்டு இங்கு மணிபயளுக்கு மணிஅடிகிரான், இது ஒரு பொலப்பா ? இல்லன்னா கும்பலில் ரெகார்ட் ஓட்டுறான். ஆளு வளர்ந்தா மட்டும் போதாது மாப்ளே, அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி, அது சரி அறிவு இருக்குறவனுக்குதான் அது பொருந்தும், ஒனக்கு நோ சான்ஸ்.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
29 ஜன, 2013 - 13:13 Report Abuse
 பயில்வான் எலி வேட்டைக்கு போயிருப்பான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in