நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரையுலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருவது போல நடிகைகள் பெரிய அளவில் பட தயாரிப்பில் ஈடுபடுவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஒரு பக்கம் பிசியாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை டாப்சியும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
சமந்தாவைப் பொறுத்தவரை பாலிவுட்டுக்குள் அடி எடுத்து வைத்தாலும் வெப்சீரீஸ் பக்கமே தற்போது அவரது கவனம் இருக்கிறது. ஏற்கனவே பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதே ராஜ் மற்றும் டிகே. இரட்டை இயக்குனர்களின் மற்றொரு வெப்சீரிஸில் தற்போது நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.