ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி நடிகர் கஞ்சாகருப்பு இதுவரை 200 படங்கள் வரை நடித்து விட்டார். இந்த நிலையில், மன்னார் வளைகுடா என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பவர், தற்போது வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்தும் வருகிறார். காமெடியன், கதாநாயகன், தயாரிப்பாளர் என்று பல முகங்களை காண்பித்துள்ள கஞ்சாகருப்பு அடுத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாய் ஒரு செய்தி பரவியிருக்கிறது.
இந்த செய்தியை உறுதிப்படுத்த கஞ்சாகருப்புவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சினிமாவில் டைரக்டர்கள் சொல்வதை கேட்டு அதன்படியே நடித்து வருகிறேன். நான் இந்த நிலைக்கு இன்றைக்கு வளர்ந்து நிற்பதற்கு காரணம் இயக்குனர்கள்தான். அவர்கள் இல்லையேல் இந்த கஞ்சா கருப்பு இல்லை. அப்படிப்பட்ட நான் படம் இயக்குகிறேன் என்று எழுந்திருக்கும் செய்தி எனக்கே வேடிக்கையாக உள்ளது. அதோடு, படம் இயக்க வேண்டும் என்றால் நிறைய அறிவு வேண்டும். எனக்கெல்லாம் அந்த அளவுக்கு அறிவு கிடையாது என்கிறார் கஞ்சாகருப்பு.