நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான குப்ரா சயித், 'சுல்தான், ரெடி அண்ட் சிட்டி ஆப் லைப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ஓபன் புக்' என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் சிறுவயதில் இருந்து அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல்களை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். பாலியல் குற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து எதிர் விமர்சனங்களை வரும். இதனால் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.