முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
பஞ்சாபை சேர்ந்த கராத்தே வீராங்கனை அம்ரிந்த்பால். அவருக்கு திடீரென காலில் நரம்பு பிரச்னை ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை பெற வேண்டியது இருந்தது. இதற்கு போதிய பணமின்றி தவித்தார். நண்பர்களின் ஆலோசனைப்படி தனது நிலை குறித்து பாலிவுட் வில்லன் நடிகர் சோனுசூட்டிற்கு வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த சோனுசூட் அவருக்கான மருத்து செலவு முழுவதையும் ஏற்றார். இது நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அம்ரிந்த்பால் அகில இந்திய பெண்கள் கராத்தே போட்டியில் தங்கபதக்கத்துடன் சேம்பியன் ஆனார். பதக்கம் பெற்ற உடனேயே நடிகர் சோனுசூட்டை சந்தித்து அவரிடம் பதக்கத்தை வழங்கினார். இந்த நிகழ்வால் நெகிழ்ந்த சோனுசூட்
இதுகுறித்து கூறியிருப்பதாவது: மற்றவர்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை காணும் போது நம் வாழ்க்கையும் மதிப்புக்கு உள்ளாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்ரிந்த்பால் என்ற கராத்தே வீராங்கனை முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அவர் பல கனவுகளுடன் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
இதனையடுத்து அவருடைய கால் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து கையில் தங்கப் பதக்கத்துடன் என்னை வந்து சந்தித்தபோது, அவர் மீதான மதிப்பு எனக்கு மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் பர்மிங்காமில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் விளையாட உள்ளார், அவர் இந்தியாவை மென்மேலும் பெருமைப்படுத்துவார் என்றும் நான் நம்புகிறேன் . இவ்வாறு சோனுசூட் தெரிவித்திருக்கிறார்.