இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கடந்த 2006ல் சுந்தர் சி நடிப்பில் வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் முதன்முறையாக கதாநாயகனாகவும் மாறினார் சுந்தர்.சி. சுராஜ் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக லாலக் பால்வணி நடிக்க, முக்கிய வேடங்களில் தம்பி ராமையா மற்றும் பாகுபலி புகழ் காளகேயா பிரபாகர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாகரின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அதே நாளில் கொஞ்ச நேரம் கழித்து இந்தப்படத்தில் பிரபாகர் கதாபாத்திரம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது போன்று ஒரு காட்சியும் இருந்ததால் மீண்டும் படத்திற்காக ஒருமுறை கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.