வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விவேக் ஓபராய் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பயங்கரமாக இருந்தது. பிரித்விராஜை திறமையின் பவர் ஹவுஸ் என்று சொல்வேன். அவர் ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், படம் இயக்குகிறார், தயாரிப்பாளராக இருக்கிறார்.. என்ன வேலை தான் அவர் செய்யவில்லை..! படப்பிடிப்பில் எங்களை எல்லாம் மீறி ஏதாவது ஒரு விஷயம் செய்து அசத்தி விடுவார். அதுதான் எங்களை பயப்படுத்தும். அவ்வளவு ஏன் பெண் வேடம் போட்டால் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தை கூட அவரை நடித்து விடுவார்.. அவரை கேரளாவின் கமல்ஹாசன் என்று தான் நான் சொல்வேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.