மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறிப்போய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளின் ரேவதியும் ஒருவர். அதனால் தான் இந்த முப்பது வருடத்திற்கு மேலான அவரது திரையுலக பயணத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் நடிக்க வந்த காலத்திலிருந்து தற்போது வரை கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசு விருது பட்டியலில் பூதக்காலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் தங்களது சக நடிகையான ரேவதி முதன்முறையாக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளதை அவரது தோழிகளாக எண்பதுகளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த குஷ்பு, சுகாசினி, லிசி, அம்பிகா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.