ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறிப்போய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளின் ரேவதியும் ஒருவர். அதனால் தான் இந்த முப்பது வருடத்திற்கு மேலான அவரது திரையுலக பயணத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் நடிக்க வந்த காலத்திலிருந்து தற்போது வரை கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசு விருது பட்டியலில் பூதக்காலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் தங்களது சக நடிகையான ரேவதி முதன்முறையாக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளதை அவரது தோழிகளாக எண்பதுகளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த குஷ்பு, சுகாசினி, லிசி, அம்பிகா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.