நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். தற்போது சாருகேசி என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி இந்த நாடகம் நாரதகான சபாவில் நடந்தபோது ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் நாடகத்தை பார்க்க சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் நாடக குழுவை பாராட்ட முடியாமல் சென்று விட்டார். இதனால் நாடக நடிகர்களின் மனம் வருந்தப்பட்டிருக்கும் என்று கருதிய ரஜினி, நாடகத்தில் நடித்த அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது: உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.
இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். சொன்னபடி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். என்றார்.