நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு ஜுலை மாதம் முதல் ஆரம்பமாகும் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது படப்பிடிப்பை மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது. முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் அதிகமாக இருக்கும்படி முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது ஹிந்தி நடிகர் ஒருவரையும் கூடுதலாகச் சேர்க்கலாமா என யோசிக்கிறாராம் இயக்குனர். முதல் பாகத்திற்கு ஹிந்தியில் நல்ல வசூல் கிடைத்தது. இரண்டாம் பாகத்தில் அதை விட பன்மடங்கு வேண்டுமென்றால் ஹிந்தி நடிகரும் வேண்டும் என்று பாலிவுட்டில் சொல்கிறார்களாம்.
எனவே, கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதி வருகிறாராம் இயக்குனர் சுகுமார். அது திருப்திகரமாக வந்த பிறகே படப்பிடிப்பு ஆரம்பம் என்கிறார்கள். எனவே, படம் 2024ல் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது டோலிவுட் வட்டாரம்.