இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குனர் கதிரேசன் கூறுகையில், இந்த படம் 60% ஆக்சன் காட்சியில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக 10 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ள ராகவா லாரன்ஸ், பின்னர் காட்சிகளுக்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் லாரன்ஸ் இடையே பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் வித்தியாசமானதாகவும் இப்படம் இருக்கும். சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. தீமை பிறப்பதில்லை, படைக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தில் டேக் லைன் என்று கூறுகிறார்.