மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த புதுமண ஜோடி தாய்லந்து சென்று தங்களது ஹனிமூனைக் கொண்டாடி பின்னர் இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததுமே நயன்தாரா மும்பைக்குச் சென்றுவிட்டாராம். இன்று முதல் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து தனது படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க கலந்து கொள்வாராம். நயன்தாராவின் அபிமான இயக்குனராக அட்லீ இயக்கும் இந்தப் படம் மூலம் நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
பொதுவாக பாலிவுட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்வார்கள். ஆனால், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகே பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.