திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தன்னை நடிகராக அறிமுகப்படுத்தியவரின் இயக்கத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளராகப் பணிபுரிவது ஒரு சுவாரசியமான விஷயம்தான். அவர் நடிகராக இருந்து இசையமைப்பாளராக மாறிய தமன்.
ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். இசைக்குடும்பத்தில் பிறந்த தமன் அதற்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டுமே கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்திருப்பவர் தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
அடுத்த ஆண்டு அவருக்கு இரண்டு மொழிகளிலும் இரண்டு முக்கியமான படங்கள் வெளிவர உள்ளன. ஒன்று ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம். மற்றொன்று வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம். இந்த இரண்டு படங்களுக்கும் தமன் தான் இசை.
அடிக்கடி தனது படங்கள் பற்றி அப்டேட் கொடுக்கும் தமன், ஷங்கர் - ராம்சரண் படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். “ஆர்சி 15 படத்தின் இசைக்கோர்வைகள், சூப்பர் திறமைசாலி மனிதரான ஷங்கர் சாருடன்… நமது அன்பான ராம்சரண் காருவுடன் அற்புதமான பயணம் இதுவரையில்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.