நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவை சேர்ந்த நடிகை ஆயிஷா, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர். சின்னத்திரை மட்டுமில்லாமல் சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, அடிக்கடி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது அவர் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனிலும் 'மனோரமா ஆச்சி' என குறிப்பிட்டு போட்டோவுக்கான இன்ஸ்பிரேஷனை தெரிவித்துள்ளார். ஆயிஷாவின் அந்த ஆச்சி கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் ஆயிஷாவின் வெர்ஷடைல் ஆக்டிங் பற்றி புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
'பொன் மகள் வந்தாள்' சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த ஆயிஷா, தொடர்ந்து மாயா, சத்யா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் சத்யா தொடரில் ஆயிஷா நடித்து வரும் டாம்பாய் கதாபாத்திரம் அவருக்கு அதிக புகழை பெற்று தந்தது. தற்போது சத்யா சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.