ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணி இணைந்த 'ஆர்ஆர்ஆர்' படம் பெரும் வெற்றி பெற்று 1000 கோடி வசூலைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் இந்தப் படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த படங்களில், தங்களது ஓடிடி தளத்தில் 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை இந்தப் படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி தளம் என இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்து ஒரு படத்தை உருவாக்க பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆர்ஆர்ஆர்' படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
எல்லாம் கூடி வந்தால் ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணி இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இந்த 'ஆர்ஆர்ஆர்' கூட்டணியின் அடுத்த படம் உருவாகலாம் என்கிறார்கள்.