பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்தில் கெளதம்-துளசி இருவரும் உதட்டு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது. இதற்கு சினிமா மட்டுமின்றி பல்வேறுத்துறையினரைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர். குறிப்பாக 16 வயதுடைய ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இது போன்று முத்தம் கொடுத்துக்கொள்வது, குழந்தைகளிடத்தில் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்து விடும் என்று கருத்து கூறியுள்ளனர்.
ஆனால் இதுபற்றி அப்படத்தில் நடித்துள்ள துளசியை கேட்டால், இளம் வயதினர் இதுபோன்று உதட்டு முத்தம் கொடுத்துக்கொள்வது தவறு என்று சிலர் கருத்து சொல்லி வருவதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அந்த கதைக்கு அது தேவை என்கிறபோது அப்படியொரு காட்சி வைப்பதில் எந்த தவறும் இல்லை. அதில் நாங்கள் நடிப்பதும தவறில்லை. மேலும் சிறுவர்களிடம் அது தவறான அபிப்ராயத்தை உருவாக்கி விடும் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. இப்போதெல்லாம் பத்து வயசு பசங்களே இந்த மாதிரி விசயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதனால் சினிமாவைப்பார்த்துதான் அவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்வதையும் என்னால் ஏற்க முடியாது என்று அதிரடி பதில கொடுக்கிறார் துளசி.