ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐரோப்பிய நாடான நார்வேயில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் தயாராகும் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும், இதனை புலம் பெயர்ந்து நார்வேயில் குடியிருக்கும் தமிழர்கள் நடத்துகிறார்கள். அந்த வகையில் 4வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா வருகிற ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடக்கிறது. இதில் திரையிடுவதற்காக 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியன், பீட்சா, வழக்கு எண் 18/9, அட்டக்கத்தி, கும்கி, சாட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், டோனி, ராட்டினம், நீர்ப்பறவை, ஒரு கல் ஒரு கண்ணாடி, புதுமுகங்கள் தேவை, இனியவளே காத்திருப்பேன் (ஆஸ்திரேலியா), இனி அவன் (இலங்கை), சகாராப்பூக்கள் (கனடா) ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் நார்வே செல்கிறார்கள். அங்கு தேர்வு செய்யப்படும் சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.