ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா படம் இன்று வெளியாகிறது. நிகிலா விமல் ஹீரோயின். சதீஷ், ஷாரா, மனோபாலா, மோனிஷ் ரஹேஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.எல்.வினோத் இயக்கி உள்ளார்.
படம் பற்றி சிபி அளித்த பேட்டி வருமாறு: திருமணமான புதிய தம்பதிகள் குளுமனாலிக்கு தேனிலவு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சொல்லும் ஆக்ஷன் படம். இது வரை நான் நடித்த படங்களில் இதில் தான் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். பெரும்பகுதி படப்பிடிப்பு குளுமனாலி மற்றும் காஷ்மீரில் நடந்தது.
எனது பெயரை சிபி சத்யராஜ் என்று மாற்றியது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லாமே ஒரு சுயநலம் தான். சினிமாவில் அறிமுகமாகும்போது சிபி என்று தான் அறிமுகமானேன். இன்னாருடைய மகன் என்று தெரிய வேண்டும் என்பதற்காக சிபிராஜ் என்று வைத்துக் கொண்டேன். பாகுபலி படத்திற்கு பிறகு அப்பா இந்திய அளவில் பிரபலமாகி விட்டார். எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் என்னோட பெயரும் எல்லா மொழி ரசிகர்களுக்கும் தெரியட்டும் என்று சிபி சத்யராஜ் என்று மாற்றிக் கொண்டேன். என்றார்.