ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, தற்போது தனது 41வது படத்திலும் அவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா மீனவராக நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக கோவாவில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் மீனவராக நடிக்கும் சூர்யா, அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதில் இளமையாக நடிக்கும் சூர்யா, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பில் இளைஞராக நடித்து வந்த சூர்யா அடுத்தபடியாக வயதான அப்பா வேடத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.