'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
காலத்தால் அழியாத இளையராஜாவின் பழைய பாடல்களை, முதன்முறையாக "டி.டி.எஸ்., ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளனர். அவற்றிக்கு, இசைப்பிரியர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராம போனிலிருந்து, "கேசட் முறைக்கு மாறிய பின், "ஸ்டீரியோ தொழில்நுட்பம் பிரபலமானது. அதன்பின், "டிஜிட்டல் தொழில்நுட்பம் தலைகாட்டி, "சிடிக்கள் வரத்தொடங்கின. 5.1 ஒலியை கடந்து, தற்போது 7.1 ஒலிஅமைப்பு நடைமுறையில் உள்ளது. "டேப் ரிக்கார்டர் உபயோகித்த வீடுகளில், "ஹோம் தியேட்டர் இடம் பிடித்ததால், பழைய பாடல்களை சுவாரஸ்யமாய் கேட்க முடிவதில்லை. "ரீமிக்ஸ் முறையில், பாடலின் உண்மை தன்மை, பாதிக்கப்படுகிறது. அந்த குறையை போக்கும் விதமாக, இளையராஜாவின் பழைய பாடல்களை, அதே இசையில், "டி.டி.எஸ்., முறையில் ஒலி மாற்றம் செய்து, முதன் முறையாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். வெளியாகி உள்ள நான்கு ஆடியோ "சிடிகளும், "5 டிராக் மற்றும் "2 டிராக் என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு "சிடியின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான "சிடிகள் விற்பனையாகியுள்ளன.