'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காலத்தால் அழியாத இளையராஜாவின் பழைய பாடல்களை, முதன்முறையாக "டி.டி.எஸ்., ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளனர். அவற்றிக்கு, இசைப்பிரியர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராம போனிலிருந்து, "கேசட் முறைக்கு மாறிய பின், "ஸ்டீரியோ தொழில்நுட்பம் பிரபலமானது. அதன்பின், "டிஜிட்டல் தொழில்நுட்பம் தலைகாட்டி, "சிடிக்கள் வரத்தொடங்கின. 5.1 ஒலியை கடந்து, தற்போது 7.1 ஒலிஅமைப்பு நடைமுறையில் உள்ளது. "டேப் ரிக்கார்டர் உபயோகித்த வீடுகளில், "ஹோம் தியேட்டர் இடம் பிடித்ததால், பழைய பாடல்களை சுவாரஸ்யமாய் கேட்க முடிவதில்லை. "ரீமிக்ஸ் முறையில், பாடலின் உண்மை தன்மை, பாதிக்கப்படுகிறது. அந்த குறையை போக்கும் விதமாக, இளையராஜாவின் பழைய பாடல்களை, அதே இசையில், "டி.டி.எஸ்., முறையில் ஒலி மாற்றம் செய்து, முதன் முறையாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். வெளியாகி உள்ள நான்கு ஆடியோ "சிடிகளும், "5 டிராக் மற்றும் "2 டிராக் என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு "சிடியின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான "சிடிகள் விற்பனையாகியுள்ளன.