ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரும்பாலும் கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்கிற ஆசைதான் துளிர் விடும். ஆனால் அப்படி வந்த அசின் தற்போது பாலிவுட்டிலும் பிசியாகி விட்டதையடுத்து அங்கிருந்து வரும் நடிகைகள் சிலர் பாலிவுட் கனவுகளிலும் நீந்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவைப்பொறுத்தவரை இந்தி சினிமா ஆசை இருந்ததில்லை. இருப்பினும் தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆவதால் அவரது நடிப்பைப்பார்த்து அசந்துபோன அங்குள்ள டைரக்டர்கள் சிலர் இந்திக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்களாம்.
அதற்கு முன்புவரை இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லாமல் இருந்த நயன்தாராவுக்கு இப்போது தன்னை காதலித்து கைவிட்ட பிரபுதேவாவுக்கு முன்பு தானும் இந்தியில் ஒரு பிரபல நடிகையாக வேண்டும் என்கிற வெறி ஏற்பட்டுள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்று அங்குள்ள சில இயக்குனர்களுடன் மீட்டிங் போட்ட நயன், என் திறமைக்கு சரியான தீனி போடுவதாக இருந்தால் தாராளமாக இந்திக்கு வருகிறேன் என்று விருப்பம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறாராம். அதனால் தற்போது தமிழ், தெலுங்கு என்று திறமை காட்டி வரும் நயன்தாரா, கூடிய சீக்கிரமே இந்தி சினிமாவிலும் கால் பதிப்பார் என தெரிகிறது. அப்படி அவர் இந்தியில் நுழைந்தால் நிச்சயம் அது பிரபுதேவாவுக்கு தலைவலியாகத்தான் அமையும்.