ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"நீ தானே என் பொன் வசந்தம் படம் குறித்து, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அந்த படத்தில் நித்யா என்ற கேரக்டராகவே மாறிப் போன, சமந்தாவுக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும், பாராட்டுகள் குவிந்தன. இதற்கு பின், தமிழில், இரண்டு பெரிய நிறுவனங்களின் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "நீங்கள் பாலிவுட் நடிகைகளைப் பார்த்து பயப்படுகிறீர்கள்; அதனால் தான், பாலிவுட் பக்கம் போவதற்கு தயங்குகிறீர்களா என, அவரிடம் கேட்டபோது, கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்து, அலட்சியமாக உதட்டைச் சுளித்து, " ச்ச்ச், அப்படியெல்லாம், எதுவும் இல்லை பாஸ். என்னை பொறுத்தவரை, தெரியாத மொழிகளில் நடிக்கும்போது, அவ்வளவு வசதியாக இருக்காது என்ற, "பீல் உண்டு.
தமிழ், தெலுங்கு மொழிகளில், என்னால், நன்றாக பேச முடியும். ஆனால், இந்தி அப்படி இல்லையே. அதனால் தான், அந்த பக்கம் போவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. மற்றபடி, பாலிவுட் நடிகைகளைப் பார்த்து, எனக்கு எந்த பயமும் இல்லை என்கிறார், சமந்தா. தன் உடல் நிலை குறித்து, சமந்தா கூறும்போது, "உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதால், இரண்டு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. இதனால், சில படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால், தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கதை கட்டி விட்டனர். இதற்காக, நான் கவலைப் படவில்லை என்றார்.