ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொங்கல் பண்டிகையையொட்டி "நாளை முதல், 20ம் தேதி வரை, தியேட்டர்களில், ஐந்து காட்சிகள் திரையிடப்படும் என, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இச்சங்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகும் திரைப்படங்களை, நாளை முதல், வரும், 20ம் தேதி வரை, தியேட்டர்களில், ஐந்து காட்சிகள் திரையிட, அரசு அனுமதி அளித்துள்ளது. கூடுதலான, ஐந்தாவது காட்சியை, காலை, 9:00 மணிக்கு ஆரம்பித்துக் கொள்ளலாம். நடமாடும் தியேட்டர்கள், 14, 15, 16, 19 மற்றும் 20ம் தேதிகளில், காலை, 11:30 மணிக்கும்; 17 மற்றும் 18ம் தேதிகளில், மதியம், 2:30 மணிக்கும்; கூடுதல் காட்சியை திரையிட வேண்டும். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.