படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ரகுமான். துருவங்கள் பதினாறு பட வெற்றிக்கு பிறகு தமிழில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த வைரஸ் என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எதிரே' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். அமல்ஜோபி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் சேது கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் 'எதிரே' வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.