Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமானை அவமதித்தேனா? அயலான் பட இயக்குனர் விளக்கம்

18 மார், 2022 - 09:36 IST
எழுத்தின் அளவு:
Did-i-insult-Seeman?-Ayalaan-Film-Director-explains

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்த இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். கால எந்திரத்தை மையப்படுத்தி பேன்டஸி கதையாக இந்த படத்தை உருவாக்கி அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான வெற்றி படமாக கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படமும் இதேபோல பேண்டசி வகையை சேர்ந்த படம் தான். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் என்கிற கட்சியின் தலைவருமான சீமான் மாநாடு பட பூஜையின் போது அதில் கலந்து கொண்ட ரவிக்குமாரிடம் பேச முயற்சித்தபோது அவரை புறக்கணிக்கும் விதமாக அலட்சியமாக நடந்து கொண்டார் என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தனது தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளார் ரவிக்குமார்.

இதுபற்றி அவர் கூறும்போது "நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல. நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் படத்திலிருந்து வெளியேறிய பெண் ஒளிப்பதிவாளர் திருமணம்தனுஷ் படத்திலிருந்து வெளியேறிய பெண் ... 'எதிரே' படத்தில் ரகுமானுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவம் 'எதிரே' படத்தில் ரகுமானுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)