மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக தியேட்டர் அதிபர்களுடன் கமல் சமரசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் "விஸ்வரூபம் படத்தை, முதலில் தியேட்டர்களில் வெளியிடுவதா அல்லது டி.டி.எச்., மூலம் வெளியிடுவதா என்பது தொடர்பாக கமல் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கமல் இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம் படத்தை, வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு வேண்டப்பட்ட தயாரிப்பாளர்கள் மூலம், படம் டி.டி.எச்., வசதியில் வெளியிடும் தேதியை வரும், 11ம் தேதிக்கு பின் மாற்றினால், நாங்கள் தமிழகம் முழுவதும், 400 தியேட்டர்களில் வெளியிடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு கமலிடமிருந்து, உரிய பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், படம் திட்டமிட்டபடி இம்மாதம், 10ம் தேதி டி.டி.எச்., வசதியில், "டிவியில், 11ம் தேதி, 200 தியேட்டர்களில் வெளியிட கமல் ஏற்பாடு செய்தார். சென்னையில் சில தியேட்டர்களில், இப்படத்திற்கு நேற்று காலையிலிருந்து முன்பதிவும் செய்யப்பட்டது. சங்கங்களின் கட்டுப்பாட்டை மதித்து, "விஸ்வரூபம் படத்தை வெளியிடாத தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கட்டுப்பாட்டை மீறிய தியேட்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டதால், நேற்று மாலை, இணையதளத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும், நேற்று இரவு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்திற்கு சென்று பேச்சு நடத்தினர்.
இரவு, 9:15 மணிக்கு வெளியில் வந்த பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை பற்றி கேட்டபோது, "படம் டி.டி.எச்.,சில் வருவதற்கு முன்பாக, தியேட்டர்களில் வரும். எத்தனை தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பது குறித்து, சங்க உறுப்பினர்களை கலந்து பேசி இன்று மாலை, 3:00 மணிக்கு தெரிவிக்கப்படும் என, கூறினார்.
இவர் போன அரை மணி நேரம் கழித்து, வெளியில் வந்த அபிராமி ராமநாதன் கூறும்போது, "பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது என, கூறினார். வேறு பதில் சொல்லவில்லை.
அவருக்கு பின் வந்த கேயாரிடம் கேட்டபோது, "இந்த படம் தியேட்டரில், டி.டி.எச்.,சில் வெளியிடப்படுவது குறித்து, கமல் இன்று அறிவிப்பார் என, கூறினார்.