ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வச்சாச்சாம். இதனை விஷ்ணுவர்தனே உறுதிபடுத்தியுள்ளார். பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒருபடம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்-நயன்தாராவுடன், ஆர்யா-டாப்சியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பட தலைப்பு பிரச்னை பெரும் பிரச்னையாக இருப்பதால் தங்களது படத்திற்கு எந்தவிதமான தலைப்பு பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார் விஷ்ணுவர்தன். அதனால் பல்வேறு தலைப்புகளை யோசித்து இப்போது, ஒருவழியாக படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார்.
இதுகுறித்து டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, படத்தின் தலைப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போது ஒரு தலைப்பு வைத்துவிட்டோம். அது என்ன தலைப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒருவிழா எடுத்து அறிவிக்க போவதாக கூறப்படுகிறது.