ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவரது தந்தை விபின் மோகன் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த மஞ்சிமா, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள எப்ஐஆர் படம் நாளை வெளிவருகிறது.
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த காதல் செய்தியை இதுவரை மறுக்கவில்லை.