ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் மறைந்த என்டிஆர் என்கிற என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த போதும் அவரது மாமனார் என்டிஆர் பெயரில் எந்த மாவட்டத்திற்கும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 13 புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக சேர உள்ள 13 மாவட்டங்களால் மொத்தம் 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வர உள்ளன.
அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க உள்ளனர். அதன் தலைநகராக விஜயவாடா நகரம் இருக்கும். கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார். அதனடிப்படையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டம் அமைய உள்ளது தெலுங்குத் திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.