ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2022ம் ஆண்டு பொங்கல் தினம் திரையுலகத்தைப் பொறுத்தவரை பெரும் சோகத்துடன்தான் ஆரம்பமாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் சில படங்கள் வெளியானதால் ஓரளவிற்கு வசூலைப் பார்க்கலாம் என தியேட்டர்காரர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், பொங்கல் விடுமுறை நாட்களிலேயே வெளியான படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட மக்கள் வரவில்லை. சில படங்களுக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில படங்களுக்கான காட்சிகள் குறைந்த அளவு ரசிகர்களுடன் நடைபெற்றன. இது தியேட்டர்காரர்களுக்கும், அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வார சோகம் இந்த வாரமும் தொடர்கிறது. இன்று சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் பல படங்களின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இன்றைய மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் பல தியேட்டர்களில் ஒரு டிக்கெட் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. சில தியேட்டர்களில் ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு வெளியான, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள்” ஆகிய படங்களில் ஒரு படம் கூட அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இல்லாமல் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கத் தவறிவிட்டது.